தவெகவுக்கான ஆதரவில் கடுக்களவு குந்தகமும் ஏற்படாது! இடதுசாரிகள் முதல்வர் விஜய் குறித்து அவதூறு!அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி மனு! முதல்வர் விஜய்யுடன் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு! மாலை கூட்டத்தில் பங்கேற்பில்லை! அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்! தவெகவில் இணைகிறார்?அதிமுக மகளிரணி கூட்டம்: எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை!மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

திருச்சியில் கிருஷ்ணன் கோயில் பூட்டை உடைத்து விநாயகர் சிலை திருட்டு!

திருச்சியில் கிருஷ்ணன் கோயில் பூட்டை உடைத்து விநாயகர் சிலை திருடு போனது தொடர்பாக...

News image

திருச்சி பீமநகரில் உள்ள கிருஷ்ணன் கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், விநாயகர் சிலையை திருடிச் சென்றனர். - டிஎன்எஸ்

Updated On :1 ஜூலை 2026, 12:02 pm IST

திருச்சி: திருச்சி பீமநகரில் உள்ள கிருஷ்ணன் கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், விநாயகர் சிலையை திருடிச் சென்றனர்.

திருச்சி பீமநகர் பகுதியில் அமைந்துள்ள பழமைவாய்ந்த ஸ்ரீ ஆதி காளிகாம்பாள் ஸ்ரீ வேணுகோபாலகிருஷ்ணன் கோயில் அமைந்துள்ளது. இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும், பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வது வழக்கம்.

இந்த நிலையில், கோயில் அர்ச்சகர் கிஷாந்த் மனோஜ் வழக்கம்போல பூஜைகளை முடித்துவிட்டு, இரவு வழக்கம் போல கோயிலை பூட்டி விட்டுச் சென்றார். அதன்பின், புதன்கிழமை காலை கோயிலைத் திறந்து பார்த்தபோது, கருவறையில் இருந்த சுமார் 3 அடி உயரமுள்ள பிரதோஷ விநாயகர் சிலை காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

விநாயகர் சிலைத் திருட்டு தொடர்பாக கோயில் அர்ச்சகர் உடனடியாக அறநிலையத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, கோயில் செயல் அலுவலர் செங்குலத்தான், இதுதொடர்பாக செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கோயிலின் பூட்டை உடைத்துச் சிலை திருடிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி, தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Summary

Vinayagar idol stolen after lock of Krishna temple in Trichy is broken; police investigating

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.