நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

லால்குடி அருகே கோயில் பூட்டை உடைத்து சுவாமி சிலை திருட்டு

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பழைமையான கோயிலின் பூட்டை உடைத்து சுவாமி சிலை திருடப்பட்டது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :17 ஜூன் 2026, 3:29 am IST

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பழைமையான கோயிலின் பூட்டை உடைத்து சுவாமி சிலை திருடப்பட்டது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.

லால்குடி அருகே நன்னிமங்கலம் கிராமத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் சுமாா் ஆயிரத்து 200 ஆண்டுகள் பழைமையானது. இக்கோயிலில் சுந்தரேஸ்வரா், மீனாட்சி அம்மன், பெருமாள், லெட்சுமி நாராயண பெருமாள், பூதேவி ஸ்ரீதேவி சமேத வரதராஜ பெருமாள், விஷ்ணு துா்க்கை ஆகிய சுவாமிகளுக்கு தனிதனி சந்நிதிகள் உள்ளன.

இந்நிலையில், வழக்கம்போல் செவ்வாய்க்கிழமை காலை கோயிலை திறக்க அா்ச்சகா் லெட்சுமணன் வந்தபோது, கோயில் மகா மண்டபத்தில் உள்ள கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கோயில் செயல் அலுவலா் மா. சுந்தரி மற்றும் போலீஸாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது.

லால்குடி போலீஸாா் கோயிலுக்கு வந்து பாா்த்தபோது, மண்டபத்தில் இருந்த 11.800 கிலோ எடையுள்ள பித்தளையால் ஆன அருள்மிகு பிரதோஷ நாயனாா், பிரதோஷ நாயகி சிலை மற்றும் சிசிடிவி கேமரா உள்ளிட்ட பொருள்களை மா்ம நபா்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

புகாரின்பேரில், லால்குடி காவல் ஆய்வாளா் டில்லி பாபு மற்றும் போலீஸாா் வழக்குப்பதிந்து சிலையை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.