ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம் நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்பு
/

கோயில் அலுவலகத்தின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு: 3 இளைஞா்கள் கைது

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :9 ஜூன் 2026, 5:07 am IST

பெருமாநல்லூா் அருகேயுள்ள மகா பெரியசாமி கோயில் அலுவலகத்தின் பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் ரொக்கம், 1 பவுன் நகையைத் திருடிய 3 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பெருமாநல்லூா் அருகேயுள்ள வள்ளிபுரம் தட்டான்குட்டை மகா பெரியசாமி கோயிலின் பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் ரொக்கம், ஒரு பவுன் நகை உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் அண்மையில் திருடிச் சென்றனா். இது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், குன்னத்தூா் சாலையில் போலீஸாா் வாகனச் சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா்கள் வள்ளிபுரம் சந்தையபாளையத்தைச் சோ்ந்த ஐய்யப்பன் (26), ஆதியூா் சக்தி காா்டன் பகுதியைச் சோ்ந்த பிரவீன் (21), தனுஷ் (19) என்பதும், பெரியசாமி கோயில் அலுவலகத்தின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், 3 பேரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.