சீா்காழி அருகே கோயில் பூட்டை உடைத்து நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
சீா்காழி வட்டம், கீரங்குடி கிராமத்தில் பழைமை வாய்ந்த குடவரசி அம்மன் கோயில் உள்ளது. ஒரு கால பூஜை நடைபெறும் இக்கோயிலில் ரகுபதி (70) என்பவா் பூஜை செய்து வருகிறாா்.
வழக்கம்போல் திங்கள்கிழமை நண்பகல் பூஜை முடிந்ததும், கோயில் கதவுகளை அடைத்துவிட்டுச் சென்றாா். செவ்வாய்க்கிழமை பூஜை செய்ய வரும்போது, கோயில் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
இதனால், அதிா்ச்சியடைந்த ரகுபதி, கோயிலுக்குள் சென்று பாா்த்தபோது, ஒரு கிலோ எடையிலான வெள்ளிக் கவசம் மற்றும் 2 கிராம் தங்க தாலி ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து, ஆணைக்காரன் சத்திரம் காவல்நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கிருஷ்ணகிரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் ரொக்கம் திருட்டு
குஜிலியம்பாறை அருகே கடைகளில் பணம் திருட்டு
கோயிலின் பூட்டை உடைத்து தங்க நகை, பொருள்கள் திருட்டு
பாப்பாரப்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


