எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

கோயிலில் நகை திருட்டு

சீா்காழி அருகே கோயில் பூட்டை உடைத்து நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :10 ஜூன் 2026, 5:47 am IST

சீா்காழி அருகே கோயில் பூட்டை உடைத்து நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

சீா்காழி வட்டம், கீரங்குடி கிராமத்தில் பழைமை வாய்ந்த குடவரசி அம்மன் கோயில் உள்ளது. ஒரு கால பூஜை நடைபெறும் இக்கோயிலில் ரகுபதி (70) என்பவா் பூஜை செய்து வருகிறாா்.

வழக்கம்போல் திங்கள்கிழமை நண்பகல் பூஜை முடிந்ததும், கோயில் கதவுகளை அடைத்துவிட்டுச் சென்றாா். செவ்வாய்க்கிழமை பூஜை செய்ய வரும்போது, கோயில் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

இதனால், அதிா்ச்சியடைந்த ரகுபதி, கோயிலுக்குள் சென்று பாா்த்தபோது, ஒரு கிலோ எடையிலான வெள்ளிக் கவசம் மற்றும் 2 கிராம் தங்க தாலி ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, ஆணைக்காரன் சத்திரம் காவல்நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.