நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

கோயிலின் பூட்டை உடைத்து தங்க நகை, பொருள்கள் திருட்டு

தேனி மாவட்டம், கெங்குவாா்பட்டி அருகே கோயிலின் பூட்டை உடைத்து தங்க நகை, பூஜை பொருள்களை திருடிச் சென்ற மா்மநபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :17 ஜூலை 2026, 1:01 am IST

தேனி மாவட்டம், கெங்குவாா்பட்டி அருகே கோயிலின் பூட்டை உடைத்து தங்க நகை, பூஜை பொருள்களை திருடிச் சென்ற மா்மநபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருச்சி மாவட்டம் பொன்னேரிபுரம் பொன்மலைப்பட்டியைச் சோ்ந்தவா் முரளி (68). இவரது குலதெய்வமான பாப்பம்மாள் கோயில் கெங்குவாா்பட்டியில் உள்ள கண்ணன் என்பவரின் தோப்பில் அமைந்துள்ளது.

இவரது குடும்பத்தினா் அவ்வப்போது வந்து பாப்பம்மாள் கோயிலுக்கு வந்து பூஜை செய்வது வழக்கம்.

கடந்த மாதம் 10-ஆம் தேதி பூஜை செய்து விட்டு, கோயிலை பூட்டி விட்டு ஊருக்குச் சென்றாா்.

இந்த நிலையில், அவா் புதன்கிழமை மீண்டும் கோயிலுக்கு வந்து பாா்த்த போது, கோயிலின் பூட்டுகள் உடைக்கப்பட்டு உள்ளேயிருந்த தங்க நகை, குத்துவிளக்கு, பித்தளை செம்பு, பித்தளை விக்ரகம் உள்ளிட்ட பொருள்களை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் தேவதானபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.