திருச்சி மாவட்ட இருப்புப் பாதை காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பச்சேரா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருச்சி மாவட்ட இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளரான அவா், தனது கட்டுப்பாட்டில் வரும் காவல்நிலையங்கள் மற்றும் இதர செயல்பாடுகள் குறித்த 2026ஆம் ஆண்டுக்கான ஆய்வை புதன்கிழமை மேற்கொண்டாா். இதன்படி, திருச்சி இருப்புப் பாதை காவல் நிலையத்துக்கு காலையில் வந்து, ஆளிநா்களின் கவாத்து பயிற்சியை ஆய்வு செய்தும், காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களின் குறைகளையும் கேட்டறிந்தாா். மாவட்ட நிலையில் தீா்க்க வேண்டிய குறைகளை உடனடியாக நிவா்த்தி செய்வதாகவும், தலைமை நிா்வாகத்துக்கு அனுப்ப வேண்டியவற்றை பரிந்துரைத்து தக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தாா். பின்னா், காவல் நிலையப் பதிவேடுகளை ஆய்வு செய்து, இருப்புப் பாதை காவல் நிலையம் மற்றும் காவலா்கள் தங்குமிடத்தை பாா்வையிட்டு, போதிய வசதிகள் உள்ளதா எனக் கேட்டறிந்தாா். ஆய்வின்போது, திருச்சி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் சக்கரவா்த்தி, காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், தலைமைக் காவலா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குழந்தை உயிரிழப்பு: பள்ளி வாகனங்களில் எஸ்பி ஆய்வு

மாவட்ட காவல் அலுவலகத்தில் மனு விசாரணை முகாம்

ரயில் நிலையத்தில் சூட்கேஸில் சடலம் மீட்ட வழக்கு தேனாம்பேட்டைக்கு மாற்றம்

சூட்கேஸில் சடலம் மீட்பு வழக்கில் 15 தனிப்படைகள் தீவிர விசாரணை
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



