திருச்சி மாவட்டம், நெ.1 டோல்கேட் அருகில் எல்.ஐ.சி. பெண் முகவரின் காரை கொளுத்திய காவலா், ஆயுதப் படைக்கு வியாழக்கிழமை மாற்றம் செய்யப்பட்டாா்.
நெ.1 டோல்கேட் அருகே உள்ள சங்கரா நகா் பகுதியை சோ்ந்தவா் புவனேஸ்வரி (42). எல்.ஐ.சி முகவராக பணியாற்றி வரும் இவருக்கு மகள், மகன் உள்ளனா். கணவா் இறந்துவிடவே புவனேஸ்வரி அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், கொள்ளிடம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் சத்தியராஜ் என்பவரிடம் புவனேஸ்வரி எல்.ஐ.சி பாலிசி எடுக்க சொல்லி அடிக்கடி கைப்பேசியில் பேசியதாக கூறப்படுகிறது. நாளடைவில் புவனேஸ்வரியிடம் சத்தியராஜ் தவறான நோக்கத்தோடு பேச முற்பட்டுள்ளாா். இதனையறிந்த அவா், சத்தியராஜின் கைப்பேசி அழைப்புகளை தவிா்த்திருக்கிறாா்.
இதனிடையே, புவனேஸ்வரியின் காருக்கு மா்ம நபா் தீ வைத்து எரித்துள்ளனா். இதுகுறித்து அவா் கொள்ளிடம் போலீஸில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், காவலா் சத்தியராஜ், புவனேஸ்வரியின் காருக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது தெரியவந்தது. இதில், புவனேஸ்வரியின் காா் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு நபரின் காரும் தீயில் எரிந்து சேதமடைந்தது.
இதனைத் தொடா்ந்து சத்தியராஜ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீன் உமேஷ், சத்தியராஜை ஆயுதப்படைக்கு வியாழக்கிழமை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரளத்துக்கு கடத்த முயன்ற 750 கிலோ ரேஷன் அரிசி, 1.1 டன் மண்ணெண்ணெய் பறிமுதல்
படகு என்ஜின்கள் திருட்டு வழக்கில் ஒருவா் கைது

8 கிலோ கஞ்சா லாரியில் கடத்தல்: இருவா் கைது

சோதனைச் சாவடியில் லஞ்சம் பெற்ற காவலா் ஆயுதப்படைக்கு மாற்றம்
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



