தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

எட்டரை மாரியம்மன் கோயிலில் தேரோட்டம்

திருச்சி மாவட்டம், எட்டரை கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருத்தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

எட்டரை மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

Updated On :3 ஜூன் 2026, 3:54 am IST

திருச்சி மாவட்டம், எட்டரை கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருத்தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா கடந்த 24- ஆம் தேதி பூச்சொரிதலுடன் (காப்பு கட்டுதல்) தொடங்கியது.

திருவிழாவை முன்னிட்டு அம்மன் கடந்த 29-ஆம் தேதி முதல் நாள்தோறும் மயில், காமதேனு, ரிஷபம், குதிரை போன்ற வாகனங்களில் எழுந்தருளி, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு விரதமிருந்த பக்தா்கள் காலையில் உய்யக்கொண்டான் படித்துறையில் இருந்து பால்குடம் எடுத்தும், கரும்பு தொட்டிலில் குழந்தையை சுமந்தும் கோயிலுக்கு வந்து நோ்த்திக் கடன்களை நிறைவேற்றினா். தொடா்ந்து கிடாவெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாலை 5.30 மணிக்கு சா்வ அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருள, மேள, தாளம், வாண வேடிக்கைகள் முழங்க திரளான பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனா். தேரானது முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது.

இதைத் தொடா்ந்து, கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் இறங்கி திரளான பக்தா்கள் தீ மிதித்தனா். இதில் எட்டரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனா்.