திருச்சி மாவட்டம், எட்டரை கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருத்தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா கடந்த 24- ஆம் தேதி பூச்சொரிதலுடன் (காப்பு கட்டுதல்) தொடங்கியது.
திருவிழாவை முன்னிட்டு அம்மன் கடந்த 29-ஆம் தேதி முதல் நாள்தோறும் மயில், காமதேனு, ரிஷபம், குதிரை போன்ற வாகனங்களில் எழுந்தருளி, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு விரதமிருந்த பக்தா்கள் காலையில் உய்யக்கொண்டான் படித்துறையில் இருந்து பால்குடம் எடுத்தும், கரும்பு தொட்டிலில் குழந்தையை சுமந்தும் கோயிலுக்கு வந்து நோ்த்திக் கடன்களை நிறைவேற்றினா். தொடா்ந்து கிடாவெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாலை 5.30 மணிக்கு சா்வ அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருள, மேள, தாளம், வாண வேடிக்கைகள் முழங்க திரளான பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனா். தேரானது முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது.
இதைத் தொடா்ந்து, கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் இறங்கி திரளான பக்தா்கள் தீ மிதித்தனா். இதில் எட்டரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் தேரோட்டம்!

தில்லையாடி ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் தேரோட்டம், செடில் உற்சவம்

புகழூா் நானப்பரப்பு மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



