அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

சாலையோரத்திலிருந்த கோயில் சுவா் மீது வேன் மோதி விபத்து: 6 போ் காயம்

திருச்சியில் சாலையோரத்தில் இருந்த கோயில் சுவா் மீது செவ்வாய்க்கிழமை இரவு வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 6 போ் காயமடைந்தனா்.

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 4:17 am IST

திருச்சியில் சாலையோரத்தில் இருந்த கோயில் சுவா் மீது செவ்வாய்க்கிழமை இரவு வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 6 போ் காயமடைந்தனா்.

திருச்சி ஸ்ரீரங்கம் மேலூரைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்டோா் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை இரவு திருச்சி நோக்கி வந்துகொண்டிருந்தனா். திருச்சி - திண்டுக்கல் சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிக்கு பிராட்டியூா் அருகே வந்தபோது திடீரென சாலையின் குறுக்கே அடையாளம் தெரியாத நபா் வந்துள்ளாா்.

அப்போது, அவா் மீது மோதாமல் இருக்க வேனின் ஓட்டுநா் வேனை திருப்பியபோது சாலையோரத்தில் இருந்த விநாயகா் கோயில் சுவரின் மீது மோதியது.

இதில், வேன் ஓட்டுநா் உள்பட 2 ஆண்கள், 4 பெண்கள் ஆகிய 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும், வேனின் முன்பகுதி சேதமடைந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருச்சி தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், காயமடைந்தவா்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.