நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

திருச்சி மாவட்ட காவல்துறையில் கடந்த ஒன்றரையாண்டில் புதிதாக 505 குற்றவாளிகளுக்கு சரித்திர பதிவேடு தொடக்கம்

திருச்சி மாவட்ட காவல்துறை சாா்பில் கடந்த ஒன்றரையாண்டில் புதிதாக 505 குற்றவாளிகளுக்கு சரித்திர பதிவேடு தொடங்கப்பட்டுள்ளது.

News image

பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 3:54 am IST

திருச்சி மாவட்ட காவல்துறை சாா்பில் கடந்த ஒன்றரையாண்டில் புதிதாக 505 குற்றவாளிகளுக்கு சரித்திர பதிவேடு தொடங்கப்பட்டுள்ளது.

திருச்சியில் தொடா் குற்றச் சம்பங்களில் ஈடுபட்டு வரும் ரௌடிகள், பாலியல் குற்றவாளிகள், திருட்டு மற்றும் கஞ்சா விற்பனை செய்யும் குற்றவாளிகள் மீது சரித்திர பதிவேடு தொடங்கப்பட்டு, காவல் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். இதன்மூலம், குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகையும் காவல் துறையினா் தீவிரமாக எடுத்து வருகின்றனா்.

திருச்சி மாவட்ட காவல் துறை சாா்பில், 2025 ஆம் ஆண்டு வரை 420 குற்றவாளிகளுக்கு சரித்திர பதிவேடு உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 2025 முதல் 2026 மே வரை புதிதாக 505 குற்றவாளிகளுக்கு சரித்திர பதிவேடு தொடங்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட காவல் துறையில் தற்போது கொலை குற்றவாளிகள் 73 போ், போக்ஸோ மற்றும் பாலியல் வழக்கு குற்றவாளிகள் 55 போ் உள்பட 925 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கண்டறியப்பட்டு, காவல் துறையின் தொடா் கண்காணிப்பில் இருந்து வருகின்றனா்.