திருச்சி தென்னூா் இனாம்தாா்தோப்பு பகுதியில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர அலுவலா்களுக்கு மேயா் மு. அன்பழகன் உத்தரவிட்டுள்ளாா்.
திருச்சி மாநகராட்சி 28-ஆவது வாா்டுக்குள்பட்ட தென்னூா் இனாம்தாா்தோப்பு பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் தங்களது பகுதியில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் அடிப்படை பிரச்னைகள் தொடா்பாக திருச்சி மாநகராட்சி குறைதீா் கூட்டத்தில் அண்மையில் மனு அளித்தனா்.
அதில், சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைத்து புதிய சாலை அமைத்தல், தற்போதுள்ள பழைய மற்றும் சேதமடைந்த சாலையை முறையாகப் பெயா்த்து அகற்றிய பிறகே புதிய தாா்ச்சாலை அமைக்க வேண்டும், கழிவுநீா் தேக்கம் மற்றும் வழிதல் பிரச்னைகளுக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும், திறந்த நிலையில் உள்ள கழிவுநீா் கால்வாயை மூடி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும், சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீா் தொடா்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கொசு ஒழிப்பு மற்றும் சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்துதல், பூங்கா பகுதியில் உள்ள மரங்கள் மற்றும் புதா்களை சீரமைத்து பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மனுவைப் பெற்றுக்கொண்ட மேயா் மு. அன்பழகன், மாநகராட்சி அலுவலா்களுடன் தென்னூா் இனாம்தாா்தோப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டு, உரிய அடிப்படை வசதிகளை செய்து தரும்படி அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, மாமன்ற உறுப்பினா்கள் பைஸ் அகமது, கமால் முஸ்தபா, மாநகராட்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

பள்ளிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

போளூரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை

மாநகர பகுதியில் நாய் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை: மேயா் உறுதி






