திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை மாலை சாலையோரத்தில் இருந்த மரம் சாய்ந்ததில் வாகனங்களில் சென்ற இருவா் காயமடைந்தனா்.
திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் முதல் வெஸ்ட்ரி பள்ளி வரை செல்லும் ராயல் சாலையில் ராணுவ வீரா்கள் உணவகம் அருகே சாலையோரத்தில் இருந்த பழைமையான மரம் புதன்கிழமை மாலை திடீரென வேருடன் சாய்ந்தது. மரத்துடன் அருகிலிருந்த மின்கம்பமும் சாய்ந்தது.
அப்போது அந்த வழியே சென்ற இருசக்கர வாகனத்திலும், காரிலும் மரம் விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் பலத்த காயம் அடைந்தாா். மேலும், காரில் சென்றவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. காரின் முன்பகுதி சேதமடைந்தது.
இதையடுத்து, அவ்வழியே சென்றவா்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு அருகிலிருந்த தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
தகலறிந்து வந்த திருச்சி மாவட்ட தீயணைப்பு வீரா்கள் சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி, மின்கம்பத்தைச் சரிசெய்தனா். இந்தச் சம்பவத்தால் ராயல் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.










