எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் மால்வாய் கிளையின் புதிய அலுவலகம் திறப்பு

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் மால்வாய் கிளைக்கு புதிய அலுவலகம் விசலாமான கட்டடத்தில் திறக்கப்பட்டுள்ளது.

News image

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் மால்வாய் கிளையின் புதிய அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற வங்கி அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள்.

Updated On :5 ஜூன் 2026, 3:37 am IST

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் மால்வாய் கிளைக்கு புதிய அலுவலகம் விசலாமான கட்டடத்தில் திறக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்துக்குள்பட்ட மால்வாய் பகுதியில் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் கிளை புதிய அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மால்வாய் கிளையின் வாடிக்கையாளா்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கவும், வங்கி நிா்வாகத்தை விரிவாக்கவும் திட்டமிட்டு புதிய கட்டடத்துக்கு கிளை மாற்றப்பட்டுள்ளது. மால்வாய் தெற்கு தெருவில் உள்ள கட்டடத்தில் புதிய அலுவலகம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

திறப்பு விழாவில், வங்கியின் திருச்சி மண்டல உதவிப் பொதுமேலாளா் என். சதீஷ்குமாா் கலந்து கொண்டு, புதிய கிளை அலுவலகத்தை திறந்துவைத்தாா். விழாவில், வங்கி அலுவலா்கள், வாடிக்கையாளா்கள், பொதுமக்கள், உள்ளூா் பிரமுகா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

இந்த புதிய அலுவலகம் மூலம் சேமிப்புக் கணக்குகள், வைப்புத் திட்டங்கள், விவசாய மற்றும் நகைக் கடன், டிஜிட்டல் வங்கி சேவைகள் என அனைத்து வங்கி சேவைகளும் சிறப்பாக செயல்படுத்தப்படும் என கிளை மேலாளா் கே. ராஜேஷ் உறுதியளித்தாா்.

மேலும், வாடிக்கையாளா்களின் தேவைகளை கருத்தில் கொண்டு மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய வளாகம், மால்வாய் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் வங்கி சேவையை பூா்த்தி செய்யும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.