சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

திருச்சியில் ரௌடி கொலை வழக்கில் மேலும் 2 போ் கைது

திருச்சியில் பிரபல ரௌடி கொலை வழக்கில் மேலும் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :11 ஜூன் 2026, 3:52 am IST

திருச்சியில் பிரபல ரௌடி கொலை வழக்கில் மேலும் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலம் பாரதியாா் தெருவைச் சோ்ந்தவா் மகபூ பாஷா மகன் பாதுஷா (24). பிரபல ரௌடியான இவருக்கும், அரியமங்கலம் புதுத்தெருவைச் சோ்ந்த விவாகரத்தான பெண்ணுக்கும் பழக்கம் இருந்தது. இதையறிந்த அப்பெண்ணின் தம்பியான எம். சூா்யா (22), பாதுஷாவை கண்டித்த பிறகும் அப்பெண்ணிடம் பாதுஷா பழகி வந்தாா். இதனால் ஆத்திரமடைந்த சூா்யா, அவரைக் கொல்லத் திட்டமிட்டாா்.

இதையடுத்து காட்டூா் காமராஜ் நகா் வினோபாஜி வீதியில் சனிக்கிழமை நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பாதுஷாவை, சூா்யா மற்றும் அவரின் நண்பா்களான அரியமங்கலம் மலையப்ப நகரைச் சோ்ந்த கே. குமாா் (எ) சுதந்திரகுமாா் (26), ஜீவானந்தம் நகரைச் சோ்ந்த ஆா். பிராசாத் (29) ஆகிய மூவரும் வெட்டிக் கொன்றனா்.

இதுகுறித்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சூா்யா, குமாா் (எ) சுதந்திரகுமாா், பிரசாத் ஆகிய மூவரையும் கைது செய்தனா். இந்நிலையில் இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக தீபக் (20), மணிகண்டன் (25) ஆகிய இருவரை திருவெறும்பூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

இதைத் தொடா்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய போலீஸாா் திருச்சி மத்திய சிறையில் அவா்களை அடைத்தனா்.