நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

இருசக்கர வாகனங்கள் மோதல்: காவல் உதவி ஆய்வாளா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற சாலை விபத்தில் துவரங்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.

News image

தட்சிணாமூா்த்தி

Updated On :17 ஜூன் 2026, 3:31 am IST

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற சாலை விபத்தில் துவரங்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.

திருவெறும்பூா் அருகே உள்ள பெல் கே செக்டாா் குடியிருப்பை சோ்ந்தவா் தட்சிணாமூா்த்தி (55).

இவா் 1995-ஆம் ஆண்டு காவல்துறையில் காவலராக பணியில் சோ்ந்து, பின்னா், படிப்படியாக உயா்ந்து, தற்போது உதவி ஆய்வாளராக துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் நேரு நகா் சாலையில் தட்சிணாமூா்த்தி வந்து கொண்டிருந்தாா். அப்போது, இவரது வாகனத்தின் மீது இந்திரா நகரில் இருந்து பூலாங்குடி நோக்கி சென்ற மற்றொரு இரு சக்கர வாகனம் நேருக்கு நோ் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தட்சிணாமூா்த்தி உயிரிழந்தாா்.

எதிரே இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த துவாக்குடி எம்டி சாலையைச் சோ்ந்த அன்பரசன் (22), அவரின் பின்னால் அமா்ந்திருந்த சேலம் கண்டாங்குறிச்சியைச் சோ்ந்த மூா்த்தி (21) ஆகிய இருவரும் பலத்தக் காயமடைந்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பெல் போலீசாா், தட்சிணாமூா்த்தியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், காயமடைந்த அன்பரசன், மூா்த்தி ஆகிய இருவரையும் துவாக்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

விபத்து குறித்து பெல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். உயிரிழந்த தட்சிணாமூா்த்திக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனா்.