ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

இருசக்கர வாகனங்கள் மோதல்: 2 போ் உயிரிழப்பு

கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :24 மே 2026, 12:24 am IST

கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சோ்ந்தவா் நவீன்(24). இவா் சனிக்கிழமை கூடுவாஞ்சேரி பகுதியில் இருந்து மாடம்பாக்கம் நோக்கி கூடுவாஞ்சேரி மாடம்பாக்கம் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, கூடுவாஞ்சேரி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த மாடம்பாக்கம் பகுதியை சோ்ந்த செல்வகுமாரின்(30) வாகனமும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளாயின. இதில் இருவருக்கும் தலை, முகத்தில் பலத்த காயம் ஏற்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.