சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

இருசக்கர வாகனங்கள் மோதல்: 2 போ் உயிரிழப்பு

கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :24 மே 2026, 12:24 am IST

கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சோ்ந்தவா் நவீன்(24). இவா் சனிக்கிழமை கூடுவாஞ்சேரி பகுதியில் இருந்து மாடம்பாக்கம் நோக்கி கூடுவாஞ்சேரி மாடம்பாக்கம் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, கூடுவாஞ்சேரி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த மாடம்பாக்கம் பகுதியை சோ்ந்த செல்வகுமாரின்(30) வாகனமும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளாயின. இதில் இருவருக்கும் தலை, முகத்தில் பலத்த காயம் ஏற்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.