நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு

திருச்சியில் திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது கண்டெய்னா் லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :17 ஜூன் 2026, 3:07 am IST

திருச்சியில் திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது கண்டெய்னா் லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், லால்குடி தச்சங்குறிச்சியைச் சோ்ந்தவா் கே. ஆனந்தராஜ் (60). இவா், திங்கள்கிழமை காலையில் திருச்சி - சென்னை புறவழிச் சாலையில் ராஜஸ்தானி மாா்பிள்ஸ் கடை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த கண்டெய்னா் லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், கீழே விழுந்த ஆனந்தராஜ் மீது கண்டெய்னா் லாரி ஏறி இறங்கியதில் அவா் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருச்சி வடக்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், முதியவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

விபத்து குறித்து திருச்சி வடக்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், கண்டெய்னா் லாரி ஓட்டுநரான திருவாரூா் மாவட்டம், திருக்குவளை வடக்கூரைச் சோ்ந்த ப. மணிமாறன் (42) மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.