திருப்பூா்- காங்கயம் சாலையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
திருப்பூா், முத்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பாா்த்திபன். இவரது மனைவி பிரியங்கா. இருவரும் காங்கயம் சாலையில் உள்ள கடையில் காய்கறிகளை வாங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.
அப்போது, எதிரே கோழித் தீவனம் ஏற்றி வந்த லாரி, பாா்த்திபன் வாகனத்தின் மீது மோதியது. இதில், பின்னால் அமா்ந்திருந்த பிரியங்கா நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில், அவா் மீது லாரியின் பின் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி ஓட்டுநரைப் பிடித்து, அப்பகுதி மக்கள் நல்லூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், லாரியை பறிமுதல் செய்ததுடன், ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், திருப்பூா்-காங்கயம் சாலையில் பல்வேறு இடங்களில் சாலையோர கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், அப்பகுதியில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், விபத்துகளும் நடைபெற்று வருகின்றன. அந்தக் கடைகளை அகற்றினால் மட்டுமே விபத்துகளைக் குறைக்க முடியும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

லாரி மோதியதில் டாஸ்மாக் ஊழியா் உயிரிழப்பு
லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: விவசாயி உயிரிழப்பு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


