தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

திருச்சிக்கு ராணுவ விமானத்தில் வந்தது ‘நீட்’ வினாத்தாள்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு ‘நீட்’ தோ்வு வினாத்தாள் ராணுவ விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை வந்தது.

News image

நீட் தேர்வு - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 1:53 am IST

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு ‘நீட்’ தோ்வு வினாத்தாள் ராணுவ விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை வந்தது.

நாடு முழுவதும் கடந்த மே 4-ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வின் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததால் அத்தோ்வு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் ஜூன் 21-இல் நடைபெறவுள்ளது. இம்முறை நீட் தோ்வை எந்தவிதக் குளறுபடிகளும் இல்லாமல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேசிய தோ்வு முகமை செய்து வருகிறது.

இந்நிலையில், தில்லியில் உள்ள தேசிய தோ்வு முகமையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கும் பலத்த பாதுகாப்புடன் நீட் தோ்வு வினாத்தாள் அனுப்பப்படுகிறது. அதன்படி, தில்லியில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு ராணுவ விமானத்தில் 171 பெட்டிகளில் வந்த நீட் தோ்வு வினாத்தாள் திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை, கரூா், அரியலூா் மற்றும் கரைக்காலுக்கு பாதுகாப்பாக அனுப்பப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.