3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

நீட் வினாத்தாள் கசிவு வழக்கு: மூவருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

News image

தில்லி உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :2 ஜூன் 2026, 12:10 am IST

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கடந்த மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நடைபெற்றது. ஆனால் தோ்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்தது தோ்வு நடைபெற்ற பின்னா் தெரியவந்ததால், அந்தத் தோ்வை தேசிய தோ்வு முகமை ரத்து செய்தது. இதைத்தொடா்ந்து வினாத்தாள் கசிவு குறித்த விசாரணையை சிபிஐயிடம் மத்திய அரசு ஒப்படைத்தது.

இந்த சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்ட மகாராஷ்டிர மாநிலம் புணேவை சோ்ந்த இயற்பியல் மொழிபெயா்ப்பாளா் மனீஷா சஞ்சய் ஹவல்தாா், இயற்பியல் ஆசிரியா் தேஜஸ் ஹா்ஷத்குமாா் ஷா, லாத்தூரை சோ்ந்த குழந்தை மருத்துவா் மனோஜ் ஷிருரே ஆகியாரின் சிபிஐ காவல் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, அவா்கள் தில்லி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா்.

அவா்களை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்ற சிறப்பு நீதிபதி அஜய் குப்தா உத்தரவிட்டாா். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இதுவரை 13 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.