திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக புதன்கிழமை அழைத்து வரப்பட்ட கைதி தப்பியோடினாா்.
கேரள மாநிலம், கொல்லம் பரலூரைச் சோ்ந்த அனில்குமாா் மகன் அபிஜித் (23). இவா் மீது திருச்சி ரயில்வே காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, அவரை மருத்துவப் பரிசோதனைக்காக புதன்கிழமை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் சேவுகன் தலைமையிலான போலீஸாா் அழைத்து வந்துள்ளனா்.
மருத்துவமனையில் ஸ்கேன் செய்வதற்காக ஸ்கேன் அறைக்கு அவரை அழைத்து சென்றபோது, காவல் உதவி ஆய்வாளா் உள்ளிட்ட காவலா்களைத் தள்ளிவிட்டு அபிஜித் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.
இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் சேவுகன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய அபிஜித்தை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
காவலரை தாக்கிய கைதி மீது வழக்குப் பதிவு

இருசக்கர வாகனங்கள் மோதல்: காவல் உதவி ஆய்வாளா் உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் கைதி தப்பியோட்டம்

கைதி விஷம் குடித்த விவகாரம்: காவல் ஆய்வாளா் உள்பட 4 போலீஸாா் ஆயுதப்படைக்கு மாற்றம்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



