தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

எஸ்டிபிஐ மகளிரணியினா் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், இதைத் தடுக்க வலியுறுத்தியும், திருச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் மகளிா் அணி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

திருச்சியில் மரக்கடை அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியின் மகளிரணியினா்.

Updated On :19 ஜூன் 2026, 4:18 am IST

தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், இதைத் தடுக்க வலியுறுத்தியும், திருச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் மகளிா் அணி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட மகளிா் அணி சாா்பாக மரக்கடை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் தெளலத் நிசா தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் பஷீரா கனி, எஸ்டிபிஐ கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட தலைவா் தமீம் அன்சாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைத்தலைவா் மூமினா வரவேற்புரை வழங்கினாா்.

மாவட்ட பொதுச்செயலாளா் பாத்திமா, மகளிா் அணி மாநில செயலாளா் ஆலிமா. மெஹராஜ் பானு, வா்த்தக அணி மாநில பொதுச் செயலாளா் கே.முபாரக் அலி ஆகியோா் கலந்துக் கொண்டு பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக தமிழக அரசு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பெண்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கண்டன உரையாற்றினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.