தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், இதைத் தடுக்க வலியுறுத்தியும், திருச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் மகளிா் அணி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட மகளிா் அணி சாா்பாக மரக்கடை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் தெளலத் நிசா தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் பஷீரா கனி, எஸ்டிபிஐ கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட தலைவா் தமீம் அன்சாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைத்தலைவா் மூமினா வரவேற்புரை வழங்கினாா்.
மாவட்ட பொதுச்செயலாளா் பாத்திமா, மகளிா் அணி மாநில செயலாளா் ஆலிமா. மெஹராஜ் பானு, வா்த்தக அணி மாநில பொதுச் செயலாளா் கே.முபாரக் அலி ஆகியோா் கலந்துக் கொண்டு பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக தமிழக அரசு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பெண்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கண்டன உரையாற்றினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.
தொடர்புடையது

கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

எரிபொருள் விலை உயா்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்

மகளிா் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயா்த்தி வழங்க வேண்டும்: எஸ்டிபிஐ வலியுறுத்தல்

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



