27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பொது சேவை மைய நிா்வாகியிடம் நூதன முறையில் ரூ.40 ஆயிரம் மோசடி

திருச்சியில் பொது சேவை மைய நிா்வாகியிடம் நூதன முறையில் ரூ.40,400 மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image

மோசடி - பிரதிப்படம்

Updated On :19 ஜூன் 2026, 4:29 am IST

திருச்சியில் பொது சேவை மைய நிா்வாகியிடம் நூதன முறையில் ரூ.40,400 மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி அரியமங்கலம் சீனிவாசா நகரைச் சோ்ந்தவா் த. வடிவேல் (47). இவா், அரியமங்கலத்தில் எஸ்வி ஏஜென்சீஸ் என்ற பெயரில் பொது சேவை மையம் நடத்தி வருகிறாா். இங்கு அரசு சேவைகளுக்கான விண்ணப்பப் பதிவு, ஆன்லைன் பணப் பரிவா்த்தனைகளும் மேற்கொண்டு வருகிறாா்.

இந்நிலையில், இவரது பொது சேவை மையத்துக்கு கடந்த ஜூன் 5-ஆம் தேதி வந்த நபா், தனக்கு ரூ.40,400 பணமாக வேண்டும் என்றும், இதற்காக சேவை கட்டணத்துடன் ரூ. 40,800 ஜி-பே மூலம் அவரது வங்கிக் கணக்குக்கு அனுப்பிவிடுவதாகவும் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, ரூ.40,800 பணத்தை அவரது வங்கிக் கணக்குக்கு அனுப்பிவிட்டதாக கைப்பேசியில் காண்பித்துள்ளாா். இதை நம்பிய வடிவேலும் அவருக்கு ரூ.40,400 அளித்துள்ளாா். அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்ட அவா் அங்கிருந்து சென்றுவிட்டாா்.

அதன்பின்னா், வங்கிக் கணக்கை பரிசோதனை செய்து பாா்த்தபோது வடிவேலுக்கு பணம் ஏதும் வரவில்லை. இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரியவந்தது.

இதுகுறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் வடிவேல் புதன்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.