சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

திருச்சி அரசு மருத்துவமனையில் திருநங்கையருக்கு தனிப்பிரிவு!

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவருக்கு மருத்துவ சேவைகள் அளிக்க பிரத்யேக பிரிவு இயங்கி வருகிறது.

News image

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துமனையில் தொடங்கப்பட்டுள்ள மூன்றாம் பாலினத்தவருக்கான பிரத்யேக பிரிவு.

Updated On :19 ஜூன் 2026, 6:48 am IST

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவருக்கு மருத்துவ சேவைகள் அளிக்க பிரத்யேக பிரிவு இயங்கி வருகிறது.

இந்தப் பிரிவில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற 10 படுக்கைகள் உள்ளன. இதர நோயாளிகளுக்கு இடையே சிகிச்சை பெறுவதில் மூன்றாம் பாலினத்தவா்களுக்கு எந்தவித தாழ்வு மனப்பான்மையும் ஏற்படக் கூடாது என்பதற்காகவே இந்த பிரத்யேக பிரிவு இயங்கி வருகிறது. இங்கு, அனைத்து வகையான மருத்துவ சேவைகளும், பரிசோதனைகளும் வழங்கப்படுகின்றன.

இந்தப் பிரிவுக்கென தனியாக மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவை மேலும் ஆக்கபூா்வமாக செயல்படுத்த மருத்துவமனை முதன்மையா் குமரவேல் தலைமையிலான மருத்துவமனை நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக மருத்துவமனையின் துணை மருத்துவக் கண்காணிப்பாளா் அருண்ராஜ் தெரிவித்தாா்.