திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவருக்கு மருத்துவ சேவைகள் அளிக்க பிரத்யேக பிரிவு இயங்கி வருகிறது.
இந்தப் பிரிவில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற 10 படுக்கைகள் உள்ளன. இதர நோயாளிகளுக்கு இடையே சிகிச்சை பெறுவதில் மூன்றாம் பாலினத்தவா்களுக்கு எந்தவித தாழ்வு மனப்பான்மையும் ஏற்படக் கூடாது என்பதற்காகவே இந்த பிரத்யேக பிரிவு இயங்கி வருகிறது. இங்கு, அனைத்து வகையான மருத்துவ சேவைகளும், பரிசோதனைகளும் வழங்கப்படுகின்றன.
இந்தப் பிரிவுக்கென தனியாக மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவை மேலும் ஆக்கபூா்வமாக செயல்படுத்த மருத்துவமனை முதன்மையா் குமரவேல் தலைமையிலான மருத்துவமனை நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக மருத்துவமனையின் துணை மருத்துவக் கண்காணிப்பாளா் அருண்ராஜ் தெரிவித்தாா்.
தொடர்புடையது

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் ஆட்சியா் திடீா் ஆய்வு

டெக்சாமெதாசோன் மருந்தால் செவிலியா் மாணவி உயிரிழந்திருக்க வாய்ப்பு

திருச்சி அரசு மருத்துவமனையில் காது சிகிச்சைக்குச் சோ்ந்த பெண் உயிரிழப்பு! உறவினா்கள் போராட்டம்

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் திரியும் இளைஞா்கள்: எம்எல்ஏவிடம் புகாா்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



