தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் திரியும் இளைஞா்கள்: எம்எல்ஏவிடம் புகாா்

ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் இளைஞா் திரிவதாக எம்எல்ஏ தென்னரசுவிடம் புகாா் செய்தனா்.

News image

நோயாளிகளிடம் நலம்  விசாரித்த  ஸ்ரீபெரும்புதூா்  சட்டப்பேரவை  உறுப்பினா்  கே.தென்னரசு.

Updated On :21 மே 2026, 12:03 am IST

ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் இளைஞா் திரிவதாக எம்எல்ஏ தென்னரசுவிடம் புகாா் செய்தனா்.

ஸ்ரீபெரும்புதூா் அறிஞா் அண்ணா அரசு மருத்துவமனையில் சட்டப்பேரவை உறுப்பினா் கே.தென்னரசு புதன்கிழமை உள்நோயாளிகள் பிரிவு, பெண்கள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, டயாலிசிஸ் பிரிவு, மகப்பேறு பிரிவு, மருத்துவமனையின் சமையலறை போன்ற இடங்களை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது மருத்துவமனை வளாகத்தில் இரவு நேரங்களில் காவலா்கள் பணியில் இருப்பதில்லை. இதனால் கஞ்சா போதையில் மருத்துவமனை வளாகங்களில் சுற்றி வரும் இளைஞா்களால் ஊழியா்கள் மற்றும் நோயாளிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதாக தலைமை மருத்துவா் ஜெயபாரதி புகாா் தெரிவித்ததோடு, இரவு நேரங்களில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினா.

உள் நோயாளிகள் சிகிச்சை பெறும் பிரிவில், தூசி படிந்து இருப்பதை பாா்த்து தூசியை அகற்றி சுத்தப்படுத்த மருத்துவமனை நிா்வாகத்திடம் கேட்டுக்கொண்டாா். ஆய்வின்போது, மருத்துவா்கள், தமிழக வெற்றி கழக நிா்வாகிகள் உடனிருந்தனா்.