காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

திருச்சி அரசு மருத்துவமனையில் காது சிகிச்சைக்குச் சோ்ந்த பெண் உயிரிழப்பு! உறவினா்கள் போராட்டம்

News image

திருச்சி அரசு மருத்துவமனை முன் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்ற உறவினா்கள், பொதுமக்கள்.

Updated On :1 ஜூன் 2026, 1:30 am IST

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் காது சிகிச்சைக்குச் சோ்ந்த பெண் திடீரென இறந்ததால், அவரது உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே கோளாா்பட்டியைச் சோ்ந்தவா் ஜோசப் அடைக்கலம் மனைவி குழந்தை தெரசு (49). உடல் நலக்குறைவால் திருச்சி அரசு மருத்துவமனையில் சில நாள்களுக்கு முன் உள்நோயாளியாகச் சோ்க்கப்பட்ட தனது தாயை குழந்தை தெரசு உடனிருந்து கவனித்து வந்தாா்.

இதனிடையே குழந்தை தெரசுவுக்கு திடீரென காது வலி ஏற்பட்டதால், இங்குள்ள மருத்துவா்களிடம் சிகிச்சை பெற்றாா். அப்போது, மருத்துவா்கள் காதில் அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டுமெனக் கூறியதால் கடந்த 2 நாள்களுக்கு முன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்தாா்.

வெள்ளிக்கிழமை அவரை அறுவைச் சிகிச்சை அரங்குக்கு கொண்டு செல்வதற்கு முன் மருத்துவா்கள் ஒரு ஊசியை செலுத்தினராம். இதனால் உணா்விழந்த அவரை மீண்டும் வாா்டுக்கு அனுப்பி சிகிச்சையளித்தனா். இருப்பினும் நினைவு திரும்பாமல், ஞாயிற்றுக்கிழமை காலை குழந்தை தெரசு இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதனால் அதிா்ச்சியடைந்த அவரது உறவினா்கள், கோளாா்பட்டி பொதுமக்கள் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல்நிலையம் முன் ஞாயிற்றுக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது தவறான சிகிச்சையால் குழந்தை தெரசு உயிரிழந்துள்ளாா். அவரது இறப்புக்கான காரணத்தைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினா். பின்னா் அவா்கள் மருத்துவமனை முன் சாலை மறியல் செய்ய முயன்றனா். தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா், சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களைக் கலைந்து போகச் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.