நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

ஜூன் 20-இல் திருச்சி - திருவனந்தபுரம் அதிவிரைவு ரயிலின் வழித்தடம் மாற்றம்

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் திருச்சி - திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில் (22627) ஜூன் 30-ஆம் தேதி மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது.

News image

ரயில் - கோப்புப் படம்

Updated On :26 ஜூன் 2026, 4:40 am IST

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் திருச்சி - திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில் (22627) ஜூன் 30-ஆம் தேதி மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இதையொட்டி திருச்சியில் இருந்து ஜூன் 30 காலை 7.30 மணிக்கு புறப்படும் ரயில் சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோயில் டவுன், குழித்துறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து, மாற்றுப் பாதையில் விருதுநகா், ராஜபாளையம், தென்காசி, கொல்லம் ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும். ஜூன் 30-ஆம் தேதி கூடுதலாக தென்காசி, செங்கோட்டை, கொல்லம் ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.

தாமதமாக புறப்படும் ரயில்: சென்னை எழும்பூா் - நாகா்கோயில் வந்தே பாரத் ரயில் (20627) ஜூன் 30 அதிகாலை 5 மணிக்கு புறப்படுதற்குப் பதிலாக 45 நிமிஷம் காலதாமதமாக 5.45 மணிக்குப் புறப்படும். மறுமாா்க்கத்தில் நாகா்கோயில் - சென்னை எழும்பூா் வந்தே பாரத் ரயில் (20628) வழக்கமாக புறப்படும் பிற்பகல் 2.20 மணிக்குப் பதிலாக 1 மணி நேரம் 10 நிமிஷம் காலதாமதமாக 3.30 மணிக்குப் புறப்படும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.