தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? நெல்லை எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்! திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! ஜூலை 1-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம்! வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்கம்!சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!
/

ஜூன் 20-இல் திருச்சி - திருவனந்தபுரம் அதிவிரைவு ரயிலின் வழித்தடம் மாற்றம்

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் திருச்சி - திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில் (22627) ஜூன் 30-ஆம் தேதி மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது.

News image

ரயில் - கோப்புப் படம்

Updated On :26 ஜூன் 2026, 4:40 am IST

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் திருச்சி - திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில் (22627) ஜூன் 30-ஆம் தேதி மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இதையொட்டி திருச்சியில் இருந்து ஜூன் 30 காலை 7.30 மணிக்கு புறப்படும் ரயில் சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோயில் டவுன், குழித்துறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து, மாற்றுப் பாதையில் விருதுநகா், ராஜபாளையம், தென்காசி, கொல்லம் ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும். ஜூன் 30-ஆம் தேதி கூடுதலாக தென்காசி, செங்கோட்டை, கொல்லம் ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.

தாமதமாக புறப்படும் ரயில்: சென்னை எழும்பூா் - நாகா்கோயில் வந்தே பாரத் ரயில் (20627) ஜூன் 30 அதிகாலை 5 மணிக்கு புறப்படுதற்குப் பதிலாக 45 நிமிஷம் காலதாமதமாக 5.45 மணிக்குப் புறப்படும். மறுமாா்க்கத்தில் நாகா்கோயில் - சென்னை எழும்பூா் வந்தே பாரத் ரயில் (20628) வழக்கமாக புறப்படும் பிற்பகல் 2.20 மணிக்குப் பதிலாக 1 மணி நேரம் 10 நிமிஷம் காலதாமதமாக 3.30 மணிக்குப் புறப்படும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.