செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

சென்னை - குருவாயூர், திருச்சி - திருவனந்தபுரம் ரயில் சேவைகளில் மாற்றம்!

குருவாயூர் ரயில் வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...

News image

ரயில் - கோப்புப் படம்

Updated On :14 ஜூன் 2026, 11:01 am IST

பொறியியல் பணிகள் காரணமாக குருவாயூர் ரயிலின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது.

பொறியியல் பணிகளால் குருவாயூர் - சென்னை எழும்பூர் விரைவு ரயிலானது (16128) வரும் 20, 21, 22, 24, 25, 26, 27, 28, 29 ஆம் தேதிகளில் சோரனூர் ரயில் நிலையத்தைத் தவிர்த்து திரிசூர், பாலக்காடு, பொள்ளாச்சி, திண்டுக்கல் வழியாக இயக்கப்படும்.

எதிர்வழித்தடத்தில், சென்னை எழும்பூர் - குருவாயூர் விரைவு ரயிலானது (16127) வரும் 27, 28, 29 ஆம் தேதிகளில் சோரனூர் ரயில் நிலையத்தைத் தவிா்த்து திண்டுக்கல், பொள்ளாச்சி, பாலக்காடு, திரிசூர் வழியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி - திருவனந்தபுரம் சென்ட்ரல் அதிவிரைவு ரயில்: ஜூன் 15 முதல் 30-ஆம் தேதி வரை தாமதமாக புறப்படும்

திருச்சி - திருவனந்தபுரம் சென்ட்ரல் அதிவிரைவு ரயில் ஜூன் 15 முதல் 30-ஆம் தேதி வரை (ஜூன் 20, 24 தவிர்த்து) 75 நிமிஷங்கள் காலதாமதமாக புறப்படும் என ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஞ்சி மணியாச்சி - நாகர்கோயில் டவுன் ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெற்று வரும் இரட்டை ரயில் பாதை பணியால் திருச்சி - திருவனந்தபுரம் சென்ட்ரல் அதிவிரைவு ரயில் (எண்: 22627) ஜூன் 15, 16, 17, 18, 19, 21, 22, 23, 25, 26, 27, 28, 29 மற்றும் ஜூன் 30 ஆகிய தேதிகளில் வழக்கமான நேரத்தைக் காட்டிலும் 75 நிமிஷம் காலதாமதமாகப் புறப்படும்.

திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து வழக்கமாக காலை 7.15 மணிக்கு புறப்படும் திருச்சி - திருவனந்தபுரம் சென்ட்ரல் அதிவிரைவு ரயில் மேற்கண்ட தினங்களில் 75 நிமிஷங்கள் கால தாமதமாக காலை 8.30 மணிக்குத்தான் புறப்படும்.

ஜூன் 24-இல் மாற்று வழியில் இயக்கம்:

திருச்சி - திருவனந்தபுரம் சென்ட்ரல் அதிவிரைவு ரயில் (எண்: 22627) ஜூன் 24-ஆம் தேதி சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகர்கோயில் டவுன், குளித்துறை ஆகிய ரயில் நிலையங்களைத் தவிர்த்து விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, புனலூர் மற்றும் கொல்லாம் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி - கான்பூா் இடையே சிறப்பு ரயில்

பொதுமக்களின் வசதிக்காக உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் - திருச்சி - கான்பூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இதன்படி, கான்பூர் சென்ட்ரல் - திருச்சி சிறப்பு விரைவு ரயிலானது (01927) வரும் 17, 24 ஆம் தேதிகளில் இயக்கப்படும். எதிர்வழித்தடத்தில், திருச்சி - கான்பூா் சென்ட்ரல் சிறப்பு விரைவு ரயிலானது (01928) வரும் 19, 26 ஆம் தேதிகளில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The route of the Guruvayur train has been diverted due to engineering works.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.