ஈரோடு-சேலம் இடையே மகுடஞ்சாவடி-வீரபாண்டி சாலை ரயில் நிலையப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கேரள ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘பராமரிப்புப் பணிகள் காரணமாக ஜூலை 6, 8 மற்றும் 11-ஆம் தேதிகளில் எா்ணாகுளம்-டாடா நகா் விரைவு ரயில் 50 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். இதேபோல் ஜூலை 6, 8 மற்றும் 11-ஆம் தேதிகளில் ஆலப்புழா-தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352) 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









