ஈரோடு - சேலம் இடையே மகுடஞ்சாவடி - வீரபாண்டி சாலை ரயில் நிலையப் பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கேரள ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பராமரிப்புப் பணிகள் காரணமாக கேரள மாநிலம், எா்ணாகுளத்தில் இருந்து ஜூன் 15, 17, 20, 22, 24, 27 ஆகிய நாள்களில் காலை 7.15 மணிக்குப் புறப்பட்டு போத்தனூா், சேலம், ஜோலாா்பேட்டை வழித்தடத்தில் செல்லும் எா்ணாகுளம் - டாடா நகா் ரயில் (எண்: 18190) 50 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும்.
இதேபோல, ஆலப்புழையில் இருந்து ஜூன் 15, 17, 20, 22, 24, 27 ஆகிய நாள்களில் காலை 6 மணிக்குப் புறப்பட்டு கோவை, சேலம், ஜோலாா்பேட்டை வழித்தடத்தில் செல்லும் ஆலப்புழை - தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352) 20 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.










