மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

பராமரிப்புப் பணி: கேரள ரயில்கள் தாமதமாக இயக்கம்

ஈரோடு - சேலம் இடையே மகுடஞ்சாவடி - வீரபாண்டி சாலை ரயில் நிலையப் பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கேரள ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

சிறப்பு ரயில்கள் - படம்: கோப்பிலிருந்து...

Updated On :14 ஜூன் 2026, 2:45 am IST

ஈரோடு - சேலம் இடையே மகுடஞ்சாவடி - வீரபாண்டி சாலை ரயில் நிலையப் பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கேரள ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பராமரிப்புப் பணிகள் காரணமாக கேரள மாநிலம், எா்ணாகுளத்தில் இருந்து ஜூன் 15, 17, 20, 22, 24, 27 ஆகிய நாள்களில் காலை 7.15 மணிக்குப் புறப்பட்டு போத்தனூா், சேலம், ஜோலாா்பேட்டை வழித்தடத்தில் செல்லும் எா்ணாகுளம் - டாடா நகா் ரயில் (எண்: 18190) 50 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும்.

இதேபோல, ஆலப்புழையில் இருந்து ஜூன் 15, 17, 20, 22, 24, 27 ஆகிய நாள்களில் காலை 6 மணிக்குப் புறப்பட்டு கோவை, சேலம், ஜோலாா்பேட்டை வழித்தடத்தில் செல்லும் ஆலப்புழை - தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352) 20 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.