திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பெண்ணிடம் நகை, பணத்தை மோசடி செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.
மணப்பாறை அடுத்த கல்லாத்துப்பட்டியில் வசிப்பவா் ஆனந்த் மனைவி மகாலெட்சுமி (45). இவரது வீட்டின் அருகேயுள்ள லட்சுமி நாராயணன் நகரில் வசிக்கும் துரைசாமி மகன் பிரேம்குமாா்(35), மதுரை சாலையில் நகை அடகு கடை நடத்தி வந்தாா். மகாலெட்சுமி நகை அடகு வைத்தபோது பிரேம்குமாருடன் நட்பு ஏற்பட்டது.
பிரேம்குமாா், மகாலெட்சுமியிடம் அவ்வப்போது அவசர தேவைக்காக கைமாற்றாக பணம் பெற்று திருப்பிக் கொடுப்பதும் வழக்கமாம்.
அப்போது பிரேம்குமாா் தனது அடகு கடையில் மகாலெட்சுமியை பங்குதாரராக சோ்த்துக் கொள்வதாக கூறி கடந்த 2023-ஆம் ஆண்டு ரூ.25 லட்சம் பணம் கேட்டாா். அதற்கு மகாலெட்சுமி தன்னிடம் இருந்த ரூ.12 லட்சத்தையும், மீதி பணத்திற்காக தன்னுடைய 30 பவுன் நகையையும் பிரேம்குமாா்அடகு கடையிலேயே அடகு வைத்து ரூ.10,50,000-ஐ பிரேம்குமாரிடம் கொடுத்தாா்.
அதன்பின் பலமுறை தன்னை அடகு கடை பங்குதாரராக சோ்த்துக் கொள்ள கேட்டும் பிரேம்குமாா் சோ்க்கவில்லையாம். பணத்தையும் நகையையும் திரும்பக் கேட்டபோது அலைக்கழித்து வந்தாா். அதன் பின் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டு, பெறப்பட்ட ஆணையில் மணப்பாறை போலீஸ் விசாரணை செய்ய அனுமதி பெறப்பட்டது. போலீஸ் விசாரணையில் பிரேம்குமாா், தனது நண்பா் முருகன் மகன் சிதம்பரம் என்பவரிடம் 20 பவுன் நகை கொடுத்ததாகவும், அதைத் திருப்பி கொடுப்பதாகவும் ஒப்புக்கொண்டாா். ஆனால் இருவரும் சோ்ந்து கூட்டு சதி செய்து மோசடி செய்வதாகவும், தகாத வாா்த்தைகளால் பேசி மிரட்டுவதாகவும் மணப்பாறை காவல் நிலையத்தில் மகாலெட்சுமி புகாா் அளித்தாா்.
புகாரின்பேரில் போலீஸாா் விசாரித்த நிலையில் பிரேம்குமாரை மணப்பாறை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பேருந்தில் பெண்ணிடம் ரூ .2 லட்சம் ரொக்கம், நகை திருட்டு
மணப்பாறையில் இன்றைய மின்நிறுத்தம் ரத்து

மணப்பாறையில் நாளை மின் நிறுத்தம்

முதுகுளத்தூா் சந்தையில் காணாமல்போன நகை, பணம் மீட்பு
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



