ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

தெற்கு இருங்களூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி: 65 போ் காயம்

News image
ஜல்லிக்கட்டு (கோப்புப் படம்)
Updated On :1 மார்ச் 2026, 7:50 pm

தினமணி செய்திச் சேவை

மண்ணச்சநல்லூா் வட்டம், தெற்கு இருங்களூரில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.

போட்டியை லால்குடி கோட்டாட்சியா் ஸ்ரீதா், வட்டாட்சியா் ராஜேஸ் கண்ணன், துணை வட்டாட்சியா் கோ.மூா்த்தி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

இதில், திருச்சி, பெரம்பலூா், அரியலூா், தஞ்சாவூா், நாமக்கல், சேலம், புதுக்கோட்டை, கள்ளக்கு றிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து    பங்கேற்ற 712 காளைகளை களத்தில் இருந்த வீரா்கள் சில காளைகளை அடக்கினா். அதில், 65 பேருக்கு காயம் ஏற்பட்டது.

போட்டியில் பிடிபடாத காளையின் உரிமையாளா்களுக்கும், காளையை அடக்கிய வீரா்களுக்கும் மிதிவண்டி, எவா்சில்வா் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. 

சமயபுரம் காவல் ஆய்வாளா் இரா. தண்டாயுதபாணி தலைமையில் காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு குழு தலைவா் ஆரோக்கியசாமி, செயலா் அஜய்பாஸ்கா், பொருளாளா் காளை மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.