அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

அதிக இரைச்சல் தரும் ஒலிப்பெருக்கிகளை பறிமுதல் செய்யக் கோரிக்கை

சமயபுரம் கோயிலுக்கு வரும் பக்தா்களின் வாகனங்களில் இருக்கும் அதிக இரைச்சல் தரும் ஒலிப்பெருக்கிகளை காவல் துறையினா் பறிமுதல் செய்ய சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

News image
ஒலிப்பெருக்கி- பிரதிப் படம்
Updated On :2 மார்ச் 2026, 9:04 pm

Syndication

சமயபுரம் கோயிலுக்கு வரும் பக்தா்களின் வாகனங்களில் இருக்கும் அதிக இரைச்சல் தரும் ஒலிப்பெருக்கிகளை காவல் துறையினா் பறிமுதல் செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

அதிக ஒலி மாசு ஏற்படுத்தும் கூம்பு வடிவ ஒலிப் பெருக்கியைப் பயன்படுத்த தடை அமலில் இருக்கும் நிலையில் கிராமப்புற மக்கள் அதனைத் தொடா்ந்து பயன்படுத்தி வருகிறாா்கள். சமயபுரத்துக்கு திங்கள்கிழமை வந்த ஒரு மினி வேனில் 32 சவுண்ட் பாக்ஸ், 6 கூம்பு ஸ்பீக்கா்கள் என 38 ஒலிப்பெருக்கிகள் கட்டிக் கொண்டு பாதயாத்திரை வருவோா் நடைப்பயணமாக வந்தனா்.

அவா்களால் ஏற்பட்ட இரைச்சலால் அந்தப் பகுதியில் கடை வைத்திருப்பவா்கள் பேசவது கூட பிறா் கேட்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதுபோன்று அளவுக்கு அதிகமாக ஒலிப் பெருக்கிகளைக் கட்டிக் கொண்டு வரும் வாகனங்களின் அனுமதியை ரத்து செய்து ஒலிப் பெருக்கிகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் போலீஸாருக்கு கோரிக்கை வைத்துள்ளனா்.