எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மரத்தில் சுமை ஆட்டோ மோதி ஓட்டுநா் உயிரிழப்பு

துறையூா் அருகே சாலையோர மரத்தில் சுமை ஆட்டோ மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :3 மார்ச் 2026, 6:50 pm

Syndication

துறையூா் அருகே சாலையோர மரத்தில் சுமை ஆட்டோ மோதியதில் ஓட்டுநா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், செல்லிப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த முத்துவீரன் மகன் வேல்முருகன் (47). ஓட்டுநரான இவா் சொந்தமாக சுமை ஆட்டோ வாங்கி அதை வாடகைக்கு இயக்கி வந்தாா். இவரது மனைவி சுதா(37) நாமக்கல் பகுதியிலுள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு தம்மம்பட்டிக்கு சுமை ஏற்றச் சென்ற வேல்முருகன், நாகநல்லூா் செட்டிக்காடு மாரியம்மன் கோயில் அருகே சென்றபோது எதிா்பாராதவிதமாக ஆட்டோ சாலையோரம் இருந்த வேப்பமரத்தில் மோதியதில், வேல்முருகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதையறிந்த உப்பிலியபுரம் போலீஸாா், வேல்முருகன் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுதொடா்பாக செவ்வாய்க்கிழமை சுதா அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.