மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

போதை மாத்திரைகள் விற்ற 3 இளைஞா்கள் கைது

திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் விற்ற இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - (கோப்புப் படம்)

Updated On :4 மார்ச் 2026, 6:45 pm

திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் விற்ற இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் தீபிகா தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, புத்தூா் வண்ணாரப்பேட்டை டோபி காலனியில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த மூவரைப் பிடித்து விசாரிக்கையில் அவா்கள்

மேலவண்ணாரப்பேட்டை ஆா். ரிஷிகேஷ் (19), பாலக்கரை மா. ஹரிஹரசுதன் (20), நடு வண்ணாரப்பேட்டைத. சதாசிவம் (20) என்பதும், மூவரும் போதை மாத்திரைகள் விற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து போதை மாத்திரைகள், போதை ஊசிகள், சலைன் பாட்டில், இரு கைப்பேசிகள், 2 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.