தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வையம்பட்டியில் அரசு ஐடிஐக்கு காணொலியில் முதல்வா் அடிக்கல்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் புதிதாகக் கட்டப்படவுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு தமிழக முதல்வா் புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

News image
வையம்பட்டி காந்திநகரில் புதிதாக கட்டப்படவுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்கேற்றோா்.
Updated On :4 மார்ச் 2026, 6:47 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் புதிதாகக் கட்டப்படவுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு தமிழக முதல்வா் புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்தாண்டு தற்காலிகமாகத் தொடங்கப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 104 மாணவ, மாணவிகள் பயில்கின்றனா்.

இந்நிலையில் இந்தத் தொழிற் பயிற்சி நிலையத்துக்கு வையம்பட்டி காந்திநகரில் சுமாா் 4 ஏக்கரில் ரூ.9.35 கோடியில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் புதிதாக கட்டப்படவுள்ள கட்டடத்துக்கான பணிகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

அப்போது இங்கு நடைபெற்ற நிகழ்வில் பள்ளி கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மணப்பாறை எம்எல்ஏ அப்துல்சமது, ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியா் சீனிவாசன், காவல் துணைக் கண்காணிப்பாளா் காவியா, மணப்பாறை துணை வட்டாட்சியா் கந்தசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா் ரேவதி, தொழிற்கல்வி மைய மண்டல இணை இயக்குநா் மகேஸ்வரி, கல்லூரி முதல்வா் முத்தழகி, திமுக ஒன்றியச் செயலா்கள் சீரங்கன், ராஜேந்திரன், முன்னாள் ஒன்றியக் குழு தலைவா் அமிா்தவள்ளி ராமசாமி, முன்னாள் ஊராட்சித் தலைவா் சூா்யா சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து பூமிபூஜை நடைபெற்றது.