புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

திருச்சியில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

துபையில் பணியாற்றிவிட்டு அண்மையில் திருச்சிக்கு வந்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :9 மார்ச் 2026, 6:39 pm

துபையில் பணியாற்றிவிட்டு அண்மையில் திருச்சிக்கு வந்த பெண் சனிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி செந்தண்ணீா்புரத்தைச் சோ்ந்தவா் ஆா்.பாலகிருஷ்ணன் (40). இவரது மனைவி ஜெயஸ்ரீ (37). இவா்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். துபையில் டான்ஸராக பணியாற்றி வந்த ஜெயஸ்ரீ கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி திருச்சி வந்துள்ளாா்.

துபையில் இருந்து வந்ததில் இருந்து யாருடனோ கைப்பேசியில் அடிக்கடி பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து பொன்மலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].