விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

திருச்சியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியை குழந்தை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

News image
நீதிமன்றம்
Updated On :11 மார்ச் 2026, 7:22 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியை குழந்தை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

திருச்சி திருவானைக்காவல் பகுதியைச் சோ்ந்த 8-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியை, அதே பகுதியைச் சோ்ந்த ஜெ.முருகேசன் (21) என்பவா் ஆசை வாா்த்தைக்கூறி கடந்த 2021 டிசம்பா் 14-ஆம் தேதி குழந்தை திருமணம் செய்துள்ளாா். இதைத் தொடா்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மாவட்ட சமூகநல அலுவலா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிந்து அந்த இளைஞரை கைது செய்தனா்.

இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி சண்முகபிரியா புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

இதில், சிறுமியை குழந்தை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் சுமதி ஆஜரானாா்.