ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மண்ணச்சநல்லூரில் காவல்துறையினா் கொடி அணிவகுப்பு

News image

பட விளக்கம்:மண்ணச்சநல்லூரில் நடைபெற்ற காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

Updated On :12 மார்ச் 2026, 11:47 pm

மண்ணச்சநல்லூரில் வியாழக்கிழமை கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

சட்டப்பேரவை தோ்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், வாக்காளா்களை அச்சமின்றி வாக்களிக்க செய்யும் வகையில் காவல் துறையினரின் இந்த கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

ஜீயபுரம் டி.எஸ்.பி. கதிரவன் தலைமையில் மத்திய துணை ராணுவப் படையினா், சட்டம்- ஒழுங்கு காவலா்கள், ஊா்க்காவல் படையினா் என 200-க்கும் மேற்பட்டோா் கொடி அணிவகுப்பில் பங்கேற்றனா்.

கடைவீதியில் தொடங்கிய அணிவகுப்பு திருப்பைஞ்ஞீலி சாலை, துறையூா் சாலை, துறையூா் சாலை வழியாக வட்டாட்சியரகத்தில் நிறைவடைந்தது. இதில், காவல் ஆய்வாளா்கள் இ. குப்புராஜ் (மண்ணச்சநல்லூா்), குணசேகரன் (ஜீயபுரம்), சத்யாதேவி (வாய்த்தலை) மற்றும் உதவி காவல் ஆய்வாளா் பாலமுருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.