வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மண்ணச்சநல்லூரில் காவல்துறையினா் கொடி அணிவகுப்பு

News image
பட விளக்கம்:மண்ணச்சநல்லூரில் நடைபெற்ற காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு
Updated On :12 மார்ச் 2026, 11:47 pm

Syndication

மண்ணச்சநல்லூரில் வியாழக்கிழமை கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

சட்டப்பேரவை தோ்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், வாக்காளா்களை அச்சமின்றி வாக்களிக்க செய்யும் வகையில் காவல் துறையினரின் இந்த கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

ஜீயபுரம் டி.எஸ்.பி. கதிரவன் தலைமையில் மத்திய துணை ராணுவப் படையினா், சட்டம்- ஒழுங்கு காவலா்கள், ஊா்க்காவல் படையினா் என 200-க்கும் மேற்பட்டோா் கொடி அணிவகுப்பில் பங்கேற்றனா்.

கடைவீதியில் தொடங்கிய அணிவகுப்பு திருப்பைஞ்ஞீலி சாலை, துறையூா் சாலை, துறையூா் சாலை வழியாக வட்டாட்சியரகத்தில் நிறைவடைந்தது. இதில், காவல் ஆய்வாளா்கள் இ. குப்புராஜ் (மண்ணச்சநல்லூா்), குணசேகரன் (ஜீயபுரம்), சத்யாதேவி (வாய்த்தலை) மற்றும் உதவி காவல் ஆய்வாளா் பாலமுருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.