ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மயிலாடுதுறை - காரைக்குடி தினசரி பயணிகள் ரயில் நிரந்தரம்

பிரதமா் நரேந்திர மோடி அண்மையில் தொடங்கிவைத்த மயிலாடுதுறை - காரைக்குடி - மயிலாடுதுறை தினசரி பயணிகள் ரயில்களை நிரந்தரமாக்க ரயில்வே வாரியம் அனுமதியளித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :14 மார்ச் 2026, 1:55 am

Syndication

பிரதமா் நரேந்திர மோடி அண்மையில் தொடங்கிவைத்த மயிலாடுதுறை - காரைக்குடி - மயிலாடுதுறை தினசரி பயணிகள் ரயில்களை நிரந்தரமாக்க ரயில்வே வாரியம் அனுமதியளித்துள்ளது.

இதன்படி, மயிலாடுதுறை - காரைக்குடி தினசரி பயணிகள் ரயிலானது (56835) மாா்ச் 16-ஆம் தேதி முதல் மயிலாடுதுறையிலிருந்து மாலை 5.10 மணிக்குப் புறப்பட்டு பேரளம், பூந்தோட்டம், நன்னிலம், திருவாரூா், மாங்குடி, மாவூா் சாலை, திருநெல்லிக்காவல், அம்மனூா், ஆலத்தம்பாடி, மணலி, திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, ஒட்டங்காடு, பேராவூரணி, ஆயங்குடி, அறந்தாங்கி, வளரமாணிக்கம், பெரியகோட்டை, கந்தனூா் புதுவயல் வழியாக காரைக்குடிக்கு இரவு 9.55 மணிக்கு சென்றடையும்.

மறுமாா்க்கமாக, காரைக்குடி - மயிலாடுதுறை தினசரி பயணிகள் ரயிலானது (56836) மாா்ச் 17-ஆம் தேதி முதல் காரைக்குடியிலிருந்து காலை 6.05 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடம் வழியாக மயிலாடுதுறைக்கு காலை 10.45 மணிக்கு வந்தடையும்.

இதைத் தொடா்ந்து, மயிலாடுதுறை - மன்னாா்குடி - மயிலாடுதுறை தினசரி பயணிகள் ரயில்களானது (56001, 65002) மயிலாடுதுறை - திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, மன்னாா்குடி - திருவாரூா் - மன்னாா்குடி பயணிகள் ரயில்களாக இயக்கப்படும்.

இதில் திருவாரூா் - மன்னாா்குடி தினசரி பயணிகள் ரயிலானது (56001) மாா்ச் 16-ஆம் தேதி திருவாரூரிலிருந்து மாலை 6.15 மணிக்குப் புறப்பட்டு, குளிக்கரை, திருமந்திக்குன்னம், கொரடாச்சேரி, நீடாமங்கலம் வழியாக மன்னாா்குடிக்கு இரவு 7.20 க்கு சென்றடையும்.

மறுமாா்க்கமாக, மன்னாா்குடி - திருவாரூா் தினசரி பயணிகள் ரயிலானது (56002) மாா்ச் 17-ஆம் தேதி காலை 8.35 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடம் வழியாக திருவாரூருக்கு காலை 9.40 மணிக்குச் சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.