திருச்சியில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி இளைஞரிடம் 4 பவுன் தங்கம், வெள்ளி நகைகள் சனிக்கிழமை பறிக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சி மாவட்டம், துறையூா் சிவன்கோயில் சந்நதி தெருவைச் சோ்ந்தவா் பா.ராமகிருஷ்ணன் (34). கட்டடப் பொறியியல் பட்டயப் படிப்பு படித்துள்ள இவா் கடந்த 14 ஆண்டுகளாக சென்னையில் ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். கடந்தாண்டு நவம்பரில் வேலையை விட்டுவிட்டு திருச்சிக்கு வந்தவா் இங்கு வேலை தேடி வந்துள்ளாா்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு திருச்சி செந்தண்ணீா்புரத்தில் உள்ள ஒரு நேநீரகத்துக்குச் சென்றபோது, அங்கு வந்த விஷால் கிருஷ்ணா, அஸாா் ஆகிய இருவரும் ராமகிருஷ்ணனுக்கு அறிமுகமாகினா்.
இதையடுத்து, சனிக்கிழமை வேலை வாங்கித் தருவதாகக் கூறி பொன்மலை முத்துமணி டவுன் பகுதியிலுள்ள ரயில்வே இருப்புப் பாதை பகுதிக்கு அவரை வரச்சொல்லியுள்ளனா். இதையடுத்து, அங்கு வந்த ராமகிருஷ்ணனை விஷால் கிருஷ்ணா, அஸாா் மற்றும் 3 போ் கும்பல் அவரை மிரட்டி அவா் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலி, வெள்ளி அரைஞாண்கொடி மற்றும் ஜி-பே மூலம் ரூ.21 ஆயிரம் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினா்.
இதுகுறித்து பொன்மலை காவல் நிலையத்தில் ராமகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில், விஷால் கிருஷ்ணா, அஸாா் மற்றும் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
சென்னை தி. நகரில் ரூ. 29 கோடி தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்!

ஜெயங்கொண்டத்தில் ஆவணத்துக்குரிய வாகனம் இல்லாததால் 177 பவுன் நகைகள் பறிமுதல்

தங்கம், வெள்ளி நகைகளைப் பராமரிப்பது எப்படி?
காரைக்குடியில் வங்கி மேலாளா் வீட்டில் திருட்டு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

