சென்னை தி. நகரில் ரூ. 29 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல தேர்தலையொட்டி பறக்கும் படை அதிகாரிகளும் தமிழகம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில் சென்னையில் ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உள்பட்ட தேர்தல் பறக்கும் படையினர் தி.நகரில் சோதனை மேற்கொண்டிருந்தபோது, உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 28.54 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ. 60 லட்சம் மதிப்புள்ள வெள்ளி நகைகளை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், நகைக்கடைகளுக்கு கொண்டு செல்லப்படுவதாகக் கூறப்பட்டபோதும் உரிய ஆவணங்கள் இல்லாததால் நகைகள் அனைத்தும் நுங்கம்பாக்கம் வருமானவரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
Gold and silver jewelry worth Rs 29 crore seized in T. Nagar Chennai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம், வெள்ளி விலை நிலவரம்

தங்கம் சவரனுக்கு ரூ. 1,840 உயர்வு! வெள்ளி விலை?

தங்கம், வெள்ளி விலை உயர்வு: எவ்வளவு உயர்ந்தது?

தங்கம், வெள்ளி விலை உயர்வு! எவ்வளவு தெரியுமா?
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



