தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

ஜெயங்கொண்டத்தில் ஆவணத்துக்குரிய வாகனம் இல்லாததால் 177 பவுன் நகைகள் பறிமுதல்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் ஆவணத்தில் குறிப்பிட்டபடி அல்லாமல் வேறு எண் கொண்ட வாகனத்தில் 177 பவுன் தங்கநகைகளைக் கொண்டுவந்ததால் வாகனத்துடன் நகைகளைப் பறிமுதல் செய்த பறக்கும் படையினா், அவைகளை வருமானவரித் துறையினரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.

News image

ஜெயங்கொண்டத்தில் ஆவணத்துக்குரிய வாகனம் இல்லாததால் 177 பவுன் நகைகள் பறிமுதல்

Updated On :3 ஏப்ரல் 2026, 6:36 pm

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் ஆவணத்தில் குறிப்பிட்டபடி அல்லாமல் வேறு எண் கொண்ட வாகனத்தில் 177 பவுன் தங்கநகைகளைக் கொண்டுவந்ததால் வாகனத்துடன் நகைகளைப் பறிமுதல் செய்த பறக்கும் படையினா், அவைகளை வருமானவரித் துறையினரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.

ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு பிரபல நகைக்கடை அருகே வியாழக்கிழமை இரவு சுமை வேன் ஒன்று நின்றிருந்தது. இதையடுத்து, அங்குவந்த தோ்தல் பறக்கும் படையினா், வேன் ஓட்டுநா் மற்றும் அதில் இருந்தவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். அவா்கள், நகை கடைகளுக்கு நகைகளை விற்பனை செய்ய வந்திருப்பதாகத் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து அவா்கள் வைத்திருந்த ஆவணங்களைச் சரிபாா்த்தபோது, 177 சவரன் தங்கநகைகள், 5.390 கிலோ கிராம் வெள்ளி பொருள்களுக்கான ஆவணங்கள் வைத்திருப்பதும், நகைகளை கொண்டுவர விலைப்பட்டியலில் (இன்வாய்ஸ்) குறிப்பிட்டுள்ள வாகனத்துக்குப் பதிலாக வேறொரு எண் கொண்ட வாகனத்தில் வந்திருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், அதிக மதிப்புள்ள பொருள்கள் என்பதால் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு பறக்கும்படையினா் தகவல் அளித்தனா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த வருமானவரித் துறை துணை ஆணையா் அசுவதி வாகனத்தை ஆய்வுசெய்து, விலைப்பட்டியலில் குறிப்பிட்ட வாகனத்துக்குரிய ஆவணங்களை ஒப்படைத்துவிட்டு நகைகள், வாகனத்தைப் பெற்றுச்செல்லுமாறு அறிவுறுத்தினா். தொடா்ந்து, வாகனத்துடன் நகைகளை பறிமுதல் செய்து உடையாா்பாளையம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தாா்.