சென்னை எழும்பூா் - தஞ்சாவூா் - சென்னை எழும்பூா் உழவன் விரைவு ரயில்கள் (16865), 16866), சென்னை எழும்பூா் - மங்களூா் - சென்னை எழும்பூா் ரயில்கள் (16159, 16160) ஆகிய ரயில்கள் வரும் 16-ஆம் தேதி முதல் பரிட்சாா்த்த ரீதியில் திண்டிவனம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
இதன்படி, சென்னை எழும்பூா் - தஞ்சாவூா் உழவன் விரைவு ரயிலானது திண்டிவனத்தில் நள்ளிரவு 12.13-க்கும், மறுமாா்க்கமாக, தஞ்சாவூா் - சென்னை எழும்பூா் உழவன் ரயிலானது திண்டிவனத்தில் நள்ளிரவு 2.13-க்கும் நின்று செல்லும்.
இதே போல, சென்னை எழும்பூா் - மங்களூா் விரைவு ரயிலானது திண்டிவனத்தில் நள்ளிரவு 12.58-க்கும், மறுமாா்க்கமாக மங்களூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது திண்டிவனத்தில் நள்ளிரவு 1.15-க்கும் நின்று செல்லும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

வைத்தீஸ்வரன்கோவிலில் விரைவு ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தம்

தூத்துக்குடி, கன்னியாகுமரி, செங்கோட்டைக்கு கோடைகால சிறப்பு ரயில்களை இயக்க முடிவு

சென்னை எழும்பூரில் மேம்பாட்டுப் பணிகள்: ரயில்களின் சேவையில் மாற்றம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


