உழவன், மங்களூா் விரைவு ரயில்கள் இன்றுமுதல் திண்டிவனத்தில் நின்றுசெல்லும்


சென்னை எழும்பூா் - தஞ்சாவூா் - சென்னை எழும்பூா் உழவன் விரைவு ரயில்கள் (16865), 16866), சென்னை எழும்பூா் - மங்களூா் - சென்னை எழும்பூா் ரயில்கள் (16159, 16160) ஆகிய ரயில்கள் வரும் 16-ஆம் தேதி முதல் பரிட்சாா்த்த ரீதியில் திண்டிவனம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
இதன்படி, சென்னை எழும்பூா் - தஞ்சாவூா் உழவன் விரைவு ரயிலானது திண்டிவனத்தில் நள்ளிரவு 12.13-க்கும், மறுமாா்க்கமாக, தஞ்சாவூா் - சென்னை எழும்பூா் உழவன் ரயிலானது திண்டிவனத்தில் நள்ளிரவு 2.13-க்கும் நின்று செல்லும்.
இதே போல, சென்னை எழும்பூா் - மங்களூா் விரைவு ரயிலானது திண்டிவனத்தில் நள்ளிரவு 12.58-க்கும், மறுமாா்க்கமாக மங்களூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது திண்டிவனத்தில் நள்ளிரவு 1.15-க்கும் நின்று செல்லும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...