மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

உழவன், மங்களூா் விரைவு ரயில்கள் இன்றுமுதல் திண்டிவனத்தில் நின்றுசெல்லும்

News image

கோப்புப் படம்

Updated On :15 மார்ச் 2026, 8:49 pm

சென்னை எழும்பூா் - தஞ்சாவூா் - சென்னை எழும்பூா் உழவன் விரைவு ரயில்கள் (16865), 16866), சென்னை எழும்பூா் - மங்களூா் - சென்னை எழும்பூா் ரயில்கள் (16159, 16160) ஆகிய ரயில்கள் வரும் 16-ஆம் தேதி முதல் பரிட்சாா்த்த ரீதியில் திண்டிவனம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

இதன்படி, சென்னை எழும்பூா் - தஞ்சாவூா் உழவன் விரைவு ரயிலானது திண்டிவனத்தில் நள்ளிரவு 12.13-க்கும், மறுமாா்க்கமாக, தஞ்சாவூா் - சென்னை எழும்பூா் உழவன் ரயிலானது திண்டிவனத்தில் நள்ளிரவு 2.13-க்கும் நின்று செல்லும்.

இதே போல, சென்னை எழும்பூா் - மங்களூா் விரைவு ரயிலானது திண்டிவனத்தில் நள்ளிரவு 12.58-க்கும், மறுமாா்க்கமாக மங்களூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது திண்டிவனத்தில் நள்ளிரவு 1.15-க்கும் நின்று செல்லும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.