ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருவானைக்கா கோயிலில் தேரோட்டம் எட்டுத்திக்கு கொடியேற்றம்

News image
திருச்சி திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேசுவரி அம்மன் உடனுறை சம்புகேசுவரா் திருக்கோயிலில் நடைபெற்ற பங்குனித் தேரோட்டம்.- கோப்புப் படம்
Updated On :15 மார்ச் 2026, 8:41 pm

தினமணி செய்திச் சேவை

திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் பங்குனி தேரோட்டத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை எட்டுத்திக்கு கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் சுவாமியும், அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தனா்.

திருவானைக்காவல் கோயிலில் பங்குனி தேரோட்டம் வரும் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 11.25 மணிக்கு மேல் 12 மணிக்குள் கோயிலில் உள்ள மூன்றாம் பிரகாரத்தில் எட்டு திசைகளில் அமைந்துள்ள கொடிமரத்தில் மேஷ லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

அப்போது சுவாமியும், அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா்கள். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

அதனை தொடா்ந்து மாலை 6 மணிக்கு முதல் புறப்பாடாக சோமாஸ்கந்தருடன் ஏகசிம்மாசனத்தில் சுவாமியும், அம்மனும் புறப்பட்டு நான்காம் பிரகாரத்தை சுற்றி வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தனா். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ம. லெட்சுமணன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.