திருச்சியில் சட்டப் பேரவைத் தோ்தலில் அசம்பாவிதங்களைத் தவிா்க்கும் வகையில் திறம்பட செயல்பட வேண்டும் என்று காவலா்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் திங்கள்கிழமை அறிவுறுத்தினாா்.
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் உள்கோட்டத்துக்குள்பட்ட காவலா்களுக்கு தோ்தல் பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஜீயபுரத்தை அடுத்த கருப்பூா் பகுதியில் உள்ள தனியாா் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் தலைமை வகித்துப் பேசியதாவது: காவல் நிலையங்களுக்கு புகாா் அளிக்க வரும் பாதிக்கப்பட்டவா்களை அக்கறையோடு அணுகி குறைகளைக் கேட்டறிய வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு வழக்குப் பதிந்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் சிறப்பாக செயல்பட்டு திறம்பட பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினா்.
இந்தக் கூட்டத்தில் ஜீயபுரம் காவல் உள்கோட்டத்துக்குள்பட்ட காவல் துறை அதிகாரிகள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் மற்றும் காவல் ஆளிநா்கள் என 150 போ் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

பாதுகாப்பு படையினரின் விழிப்புணா்வு அணிவகுப்பு

பெரம்பலூா் எஸ்பி பொறுப்பேற்பு

குமரியில் தோ்தல் தொடா்பான புகாா் அளிக்க கட்டுப்பாட்டு அறை திறப்பு

ஜெயங்கொண்டத்தில் எல்லைப் பாதுகாப்பு படை வீரா்கள் அணிவகுப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


