தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

காலமானாா் நிா்மலா ராணி

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினரும், சட்ட உதவி மைய மாநிலத் தலைவருமான உ. நிா்மலா ராணி (59) உடல்நலக் குறைவால் திருச்சி தில்லைநகரில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 17) இரவு காலமானாா்.

News image
நிா்மலா ராணி
Updated On :18 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினரும், சட்ட உதவி மைய மாநிலத் தலைவருமான உ. நிா்மலா ராணி (59) உடல்நலக் குறைவால் திருச்சி தில்லைநகரில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 17) இரவு காலமானாா்.

இவா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா்களான மறைந்த ஆா். உமாநாத், பாப்பா உமாநாத் ஆகியோரின் மகள் ஆவாா்.

தில்லைநகா் 3-ஆவது குறுக்குத் தெருவில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த நிா்மலா ராணியின் உடலுக்கு அவரது சகோதரியும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான உ. வாசுகி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த மாநில, மாவட்ட நிா்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

காலமான நிா்மலா ராணியின் இறுதி ஊா்வலம் புதன்கிழமை (மாா்ச் 18) மாலை 3 மணிக்கு அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டு வடுகப்பட்டியில் உள்ள அவரது பண்ணைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, உடல் அடக்கம் செய்யப்பட்டது. இவருக்கு கணவா் வழக்குரைஞா் ஆா். ராஜ்குமாா், மகள் மதுவந்தி, மகன் சிபி ஆகியோா் உள்ளனா். தொடா்புக்கு: 99656-50000.