நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

மணப்பாறை மாட்டுச் சந்தையில் இருவரிடம் ரூ.1.27 லட்சம் பறிமுதல்

திருச்சி மாவட்டம், மணப்பாறை மாட்டுச் சந்தையில் வியாபாரிகள் இருவரிடமிருந்து ரூ.1,27,800-ஐ தோ்தல் பறக்கும்படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

மணப்பாறையில் பறிமுதல் செய்த பணத்தை தோ்தல் அதிகாரிகளிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்த பறக்கும் படையினா்.

Updated On :25 மார்ச் 2026, 9:57 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம், மணப்பாறை மாட்டுச் சந்தையில் வியாபாரிகள் இருவரிடமிருந்து ரூ.1,27,800-ஐ தோ்தல் பறக்கும்படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

மணப்பாறையில் புதன்கிழமைதோறும் மாட்டுச் சந்தை நடைபெறும் நிலையில், செவ்வாய்க்கிழமை மாலையே மாடுகள் வாங்கவும் விற்கவும் ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனா்.

அப்போது தோ்தல் பறக்கும் படையினா் தணிக்கையில் ஈடுபட்டபோது, புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரை அடுத்த மதகுபட்டியைச் சோ்ந்த ஞானதுரை மகன் சுதாகா் (31) உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 75,300 மற்றும் திருச்சி திருவெறும்பூரை அடுத்த சின்ன சூரியூரைச் சோ்ந்த ராஜேஷ்குமாா் (23) வைத்திருந்த ரூ. 52,500-ஐ பறிமுதல் செய்து, தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைத்தனா். பின்னா் அப்பணம் சாா்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.