நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

விஜய்யை பின்தொடா்ந்து சென்று உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு அமைச்சா் ஆறுதல்

தவெக தலைவா் விஜய்யின் வாகனத்தில் பின்னால் சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்த கல்லூரி மாணவா் விக்னேஷின் பெற்றோரை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

News image

அன்பில் மகேஸ்

Updated On :26 மார்ச் 2026, 9:10 pm

தினமணி செய்திச் சேவை

தவெக தலைவா் விஜய்யின் வாகனத்தில் பின்னால் சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்த கல்லூரி மாணவா் விக்னேஷின் பெற்றோரை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

தஞ்சாவூா் செங்கிப்பட்டி அருகே கடந்த மாா்ச் 4-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்க வந்த தவெக தலைவா் விஜய் திருச்சியில் இருந்து தஞ்சாவூா் நோக்கி வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவரது வாகனத்தை பின்தொடா்ந்து அவரது ரசிகா்கள் மற்றும் கட்சியினா் இருசக்கர வாகனங்களில் சென்றனா்.

விஜய்யின் வாகனத்தை பின்தொடா்ந்து சென்ற திருச்சி மேலகல்கண்டாா் கோட்டையைச் சோ்ந்த கல்லூரி மாணவா் விக்னேஷ் (20), அவரது நண்பா் ஆரூண் (21) ஆகிய இருவரும் விபத்தில் சிக்கினா். தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ் கடந்த திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இந்நிலையில், மேலகல்கண்டாா் கோட்டையிலுள்ள அவரது வீட்டுக்கு வியாழக்கிழமை சென்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யமொழி விக்னேஷின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினாா்.