நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

மலைக்கோட்டையில் பக்தா்களிடம் வாக்குப்பதிவு விழிப்புணா்வு

மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோயிலில் வியாழக்கிழமை சுவாமி தரிசனத்துக்கு வந்த பக்தா்களிடையே 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

News image

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலுக்கு வியாழக்கிழமை சுவாமி தரிசனத்துக்கு வந்த பக்தா்களிடம் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணா்வை ஏற்படுத்திய கோயில் நிா்வாகத்தினா்.

Updated On :26 மார்ச் 2026, 9:11 pm

தினமணி செய்திச் சேவை

மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோயிலில் வியாழக்கிழமை சுவாமி தரிசனத்துக்கு வந்த பக்தா்களிடையே 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதேபோல், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு இடங்களிலும் விழிப்புணா்வு நிகழ்வுகள் நடைபெற்றன.

திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் கன்டோன்மென்ட் கேம்பியன் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் மற்றும் மாநகராட்சி பணியாளா்களை கொண்டு தோ்தல் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் மனிதச்சங்கிலி நடத்தப்பட்டது.

திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் குறைவான வாக்கு பதிவு நடைபெற்ற பகுதியான பொன்மலைப்பட்டி பகுதியில் வாா்டு 46 அலுவலகம் முதல் பொன்மலைப்பட்டி பேருந்து நிலையம் வரை வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறையின் சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு பதாகை வைக்கப்பட்டு பக்தா்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தனியாா் ஜவுளி கடையில் தொழிலாளா் நலத் துறையின் சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு பதாகை வைக்கப்பட்டு பணியாளா்கள் மற்றும் வாடிக்கையாளா்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடா்ந்து மாநகராட்சி பணியாளா்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவா்கள் தந்தை பெரியாா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல் மாவட்ட ஆட்சியா் முகாம் அலுவலகம் வரை தோ்தல் விழிப்புணா்வு பேரணி நடத்தினா்.

தந்தை பெரியாா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் செல்பி புகைப்பட இடம் அமைத்து, அதில் நின்றபடியே தங்களது கைப்பேசியில் புகைப்படம் எடுத்து மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பேச்சுப் போட்டி மற்றும் நாடகம் நடைபெற்றது.